25/Jun/2021 04:16:28
மும்பைபில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 2,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் ஊசி மூலம் தண்ணீரைச் செலுத்தி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸார் தரப்பில் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வரும் சூழலில், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படு கிறது. இந்நிலையில், மும்பை மாநகரில் உள்ள பல குடியுருப்புகளில் தனியார் மருத்து வமனை எனக் கூறி கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தண்ணீரை செலுத்தி ஏமாற்றிய து விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மும்பை .குடியிருப்பு ஒன்றில் கடந்த மே 30-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முகாமில் குடியிருப்பை சேர்ந்த 390 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு நபருக்கு ரூ.1260 வீதம் மொத்தம்ரூ.4,56,000 வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊசி போட்டுக் கொண்டவர்களில் 120 பேருக்கு மட்டுமே வெவ்வேறு மருத்துவமனை தடுப்பூசி சான்று வந்துள்ளது. கிடைக்காத நபர்கள் குறிப்பிட்ட மருத்து வமனைகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டதில் இச்சம்பவம் பற்றி தங்களுக்கு தெரிய வில்லை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் காவல்துறை விசாரணையில், செலுத்தப்பட்டது தடுப்பூசி அல்ல, தண்ணீர் என தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளார் விஷால் தாகூர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், மும்பை மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளிடம் இருந்து காலி குப்பிகளை பெற்று அதில் தண்ணீர் நிரப்பி, தடுப்பூசி எனக் கூறி 10 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர் ந்த 2,000-க்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதுபோன்ற போலி தடுப்பூசி முகாம்களை தடுக்க மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை மாநகராட்சி விரைவில் தடுப்பூசி கொள்கையில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.