logo
தீபாவளியை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் 100 பேருக்கு  புத்தாடைகள் அளிப்பு

தீபாவளியை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் 100 பேருக்கு புத்தாடைகள் அளிப்பு

16/Nov/2020 06:39:50

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  மக்கள் நீதி மய்யம் விவசாய அணி சார்பாக புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் பார்த்தீபன் மற்றும் புதுகை ஒன்றிய செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட விவசாய அணி செயலாளர் , கார்த்திக் மெஸ் மூர்த்தி  கலந்து கொண்டு  ஏழை, எளிய 100  நபர்களுக்கு  புத்தாடைகள் வழங்கினார்.

இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக  வழக்குரைஞர் அணி மாநில துணை செயலாளர் பொன். கஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்தினார். பகுதி செயலாளர் திருமலை நன்றி  கூறினார்.இதில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ராமராஜ், சக்திவேல், கமல், நவீன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Top