logo
கர்நாடகத்திலிருந்து  மதுபானங்களை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்குரைஞர் தப்பி ஓட்டம்

கர்நாடகத்திலிருந்து மதுபானங்களை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்குரைஞர் தப்பி ஓட்டம்

23/Jun/2021 05:33:35

ஈரோடு ஜூன்: சத்தியமங்கலம் அருகே  கர்நாடகா மாநிலத்திலிருந்து  காரில்  மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது போலீஸார் சோதனையிட்டபோது தப்பிச்சென்ற முன்னாள் அரசு வழக்குரைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கர்நாடகாவிலிருந்து சத்தியமங்கலம் வழியாக  மதுபாட்டில்கள் ஈரோடு மாவட்டத்துக்கு கடத்தி கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில்  போலீசார் தொடர்ந்து வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன்படி சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முற்பட்டனர். ஆனால் காரில் வந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும் காரை ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காரில் போலீசார் சோதனையிட்டபோது கர்நாடகாவிலிருந்து 1171 மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிககப்பட்டது. மேலும் காரில் வந்தவர் கோபிசெட்டிபாளையம் முன்னாள் அரசு வழக்குரைஞர் பரமேஸ்வரன்(51), என்பதும் வாகனத்தை ஓட்டி வந்தவர் சிறுவலூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த 1171 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய முன்னாள் அரசு வழக்குரைஞர் பரமேஸ்வரன் மற்றும் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Top