logo
ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் அதிமுக ஆட்சியை அசைத்து பார்க்க முடியாது:  அவைத்தலைவர் இ.மதுசூதனன் பேச்சு

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் அதிமுக ஆட்சியை அசைத்து பார்க்க முடியாது: அவைத்தலைவர் இ.மதுசூதனன் பேச்சு

20/Dec/2020 07:37:51

சென்னை டிச: தமிழகத்தில் அம்மாவின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாராலும் அசைக்க முடியாது என்றார் அதிமுக  அவைத்தலைவர் இ.மதுசூதனன்.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர். தண்டையார் பேட்டை 42 வது வட்டத்திற்கு உட்பட்ட மகளிர் சுய உதவி ஒருங்கிணைப்பு குழுக்களை சேர்ந்த 1500 பெண்களுக்கு புடவை, அரிசி மூட்டை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.

அப்போது மகளிர் சுயஉதவிக் கூட்டத்தில் மதுசூதனன் பேசியதாவது:அண்ணா தி.மு.க. இயக்கத்தில் இணைந்து பணியாற்ற மகளிர் குழுக்களுக்கு முழு பங்கு உள்ளது. கடந்த காலத்தில் அண்ணா தி.மு.க. பேரியக்கத்தை துவக்கிய புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் தேர்தல் காலத்திலும் காலநேரம் பார்க்காமல் இரவு பகல் பாராமல் மக்களுக்காகவே உழைத்த உத்தமர். அவர் வழியை பின்பற்றி புரட்சி தலைவி அம்மா செயல்பட்டு இந்திய தேசத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வலுபடுத்தினார்.

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் அசைக்க முடியாது: அப்பேர்பட்ட இயக்கத்தை எதிர்கொள்ள ரஜினி – கமல் மட்டும் அல்ல, ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் இனி அம்மா வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. தமிழக மக்கள் நலனை முழுமையாக புரிந்து கொண்டு கொரோனா காலத்திலும், புயல் மழை வெள்ள காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று இன்று தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி.

எப்பொழுதும் மக்கள் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல் படும் அரசு அம்மாவின் அரசு. ஐந்து முறை அல்ல இனி வருகின்ற அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் அண்ணா தி.மு.க தலைமையிலான அரசு தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த கடமை பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

இதில் ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் ஆர்.எஸ்.ஜெனார்தனம், எம்.என். சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மற்றும் வட்ட செயலாளர்கள் மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர், பாசறை நிர்வாகிகள் உள்பட  கலந்து கொண்டனர்.


Top