20/Jun/2021 03:50:21
ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் நள்ளிரவில் எலக்ட்ரிக்கல் கடையில் நேரிட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஈரோடு செங்கோட்டையா வீதியை சேர்ந்த சுனில்குமார். இவர் ஈரோடு பேருந்து நிலையம்
அருகே மேட்டூர் ரோட்டில் நான்கு தள கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எலக்ட்ரிக்கல் கடை பூட்டியே இருந்தது.
இந்நிலையில், சுனில்குமாரின் எலக்ட்ரிக்கல் கட்டிடத்தின் 4-ஆவது தளத்தில் மின்
ஓயர்கள் இருப்பு வைக்கும் குடோனில் நேற்று
நள்ளிரவு கரும்புகை வெளியேறிதைப் பார்த்த காவலாளி சுனில்குமாருக்கு
தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில், விரைந்து வந்த சுனில்குமார் கடையை திறந்து 4-ஆவது மாடிக்கு சென்று பார்த்தபோது விற்பனைக்கு இருப்பு வைத்திருந்த மின் ஓயர்களில் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி
தீயை கட்டுப்படுத்தினர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,
இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின் ஓயர்கள் தீயில்
எரிந்து நாசமாகியுள்ளதாகவும்
தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.