logo
முன்களப்பணியாளர்களுக்கு மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி  நிவாரண உதவிகள் அளிப்பு

முன்களப்பணியாளர்களுக்கு மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நிவாரண உதவிகள் அளிப்பு

18/Jun/2021 03:58:20

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ-   சரஸ்வதி சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்க ளை  வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு என்பது அதிகரித்த வருகிறது. இந்த நிலையில்  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்க ளுக்கு  பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக  கொரோனோ காலத்திலும் எந்த வித தயக்கமும் இன்றி பணியாற்றி வரும்  முன் கள பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் 5 கிலோ அரிசி அடங்கிய பொருட் களை வழங்கும் நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி பாஜக  சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டு 500 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள், தூய்மை பணியா ளர்கள் என 500 -க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Top