logo
பொது வேலை(நவ.26) நிறுத்தத்திற்கு ஆதரவாக ஈரோட்டில்  பி.எஸ்.என்.எல் ஓய்வூதிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பொது வேலை(நவ.26) நிறுத்தத்திற்கு ஆதரவாக ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் ஓய்வூதிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

25/Nov/2020 07:04:44

ஈரோடு: அனைத்து தொழிற் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நாளை(நவ.26) நாடு தழுவிய  பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து இன்று ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் மத்திய பொதுத்துறை ஓய்வுஊதிய கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய பொதுத்துறை ஓய்வுஊதிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி குழந்தைசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பின் நிர்வாகி ஜெயராமன், தமிழக அரசு ஊழியர் சங்க நிர்வாகி மணிபாரதி, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், நிர்வாகிகள் மணியன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 


Top