17/Jun/2021 11:44:59
ஈரோடு, ஜூன்:ஈரோடு மாவட்ட சேவா பாரதியின் சார்பாக கொரோன தொற்று நோய்க்கு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேவா பாரதியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் சி.டி. குமார் தலைமையில், மாநில சேவா பாரதியின் துணைத் தலைவர் திரு. பி.சி. அய்யப்பன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்சியில் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவரும், ஈரோடு மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தின் தலைவருமான ஈ.ஆர்.எம். சந்திரசேகர் மருந்துகளை வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் திருமூர்த்தி செய்திருந்தார்.