25/Oct/2020 05:24:00
சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் 90% நுரையீரல் பாதிப்பிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை குறித்து முதல்வர் நேரில் நலம் விசாரித்துள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.