logo
கழிவுநீர்க் குட்டையாக மாறி வரும் புதுக்கோட்டை பல்லவன் குளம்..

கழிவுநீர்க் குட்டையாக மாறி வரும் புதுக்கோட்டை பல்லவன் குளம்..

17/Jun/2021 10:49:40

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் கோயில் அருகேயுள்ள   பல்லவன் குளம்  கழிவு நீர்க்குட்டையாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.                                                                      

                                    

புதுக்கோட்டை நகரின்     மையப்பகுதிலுள்ள  பல்லவன் குளம்           சதுர வடிவில் அமைந்துள்ளது   சுற்றுப்புறம்  நான்கு வீதிகளிலும் கோவில்கள் உள்ளன. முக்கியமாக     வடக்கு கரை  பகுதியில்     குடியிருப்புகளும்  கோவில் நிர்வாக அலுவலகமு ம் இருக்கின்றன இந்தக்குளத்தில் மக்கள் குளித்து, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர் தற்சமயம் .குளத்துக்கு நீர்வரத்து நின்று போனதால் கழிவு நீர் குட்டையாக மாறிப்போனது.      குளத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில்   சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ரூ.10 லட்சம் செலவில்  சீரமைக்கப்பட்டது.

குளத்தைச் சுற்றிலும்  கைப்பிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டு  பேவர் பிளாக் நடை பாதை போடப்பட்டது . தற்போது வடக்கு கரை  பகுதியில்    கழிவு நீர் குட்டையாகவும் புற்கள்  முளைத்தும் படித்துறைகள் சிதலமடைந்தும்  காணப்படுகிறது  மேலும்  அப்பகுதியில் துர்நாற்றம்  வீசுகின்றது .மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகவும்  உடனடியாக பார்வையிட்டு  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

 

                                                   

Top