logo
திருமயம் அருகே தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஏ.சி. மிஷின்கள் திருடிய  2 பேர் கைது

திருமயம் அருகே தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஏ.சி. மிஷின்கள் திருடிய 2 பேர் கைது

23/Apr/2021 12:03:18

புதுக்கோட்டை,ஏப்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில்  காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரங்களைத் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருமயம்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  டிரான்ஸ்ட்ராய் என்ற சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்தின் அலுவலகம்  இயங்கி வருகிறது.  இங்கு 400 பேர் பணி புரிகின்றனர். 

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் வைத்திருந்த சுமார் ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள 3 ஏ.சி. மிஷின்கள் காணாமல் போனதாக  மேலாளர்   விஜயகுமார்(32).  கடந்த சில நாள்களுக்கு முன் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரை வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் மணிகண்டன்  நடத்திய விசாரணையில்  இதே நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்த விழுப்புரம்  மாவட்டம், வானூர்  தாலுகா குன்னம் கிராமத்தை சேர்ந்த  தேசிகன் மகன் பாபு(35), அவரது கூட்டாளியான அதே   ஊரைச்சேர்ந்த மூக்கன் மகன் முத்துவேல்(25) ஆகிய இருவகும் சேர்ந்து  ஏசி மிஷின்களை திருடியது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து திருட்டுப்போன ஏ.சி மிஷின்களை  மீட்டனர். கைது செய்யப்பட்ட  பாபு, முத்துவேல்  ஆகியோரை திருமயம் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தியதையடுத்து  இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க   நீதிபதி  உத்தரவிட்டார். 


Top