logo
ஈரோட்டில் சோதனை சாவடியில் இ-பதிவு இன்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைத்த போலீஸார்

ஈரோட்டில் சோதனை சாவடியில் இ-பதிவு இன்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைத்த போலீஸார்

16/Jun/2021 07:10:35

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  சோதனை சாவடிகளில் -பதிவு இன்றி வரும் வாகனங்களை போலீஸார்  திருப்பி அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 21 -ஆம்  தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். 23-ஆவது நாளான புதன்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்

முக கவசம் அணியாமல் வந்த 243 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 498 இருசக்கரவாகனங்களும், 13 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று மட்டும் ரூ.3.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வரும் 21-ஆம் தேதி வரை தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இன்று கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதில் -பதிவுப் பெற்ற வாகனங்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. -பதிவு இல்லாத வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

Top