logo
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் தேனி தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் தேனி தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

01/Apr/2021 04:56:21

தமிழகத்தில் 200  அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பரப்புரையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மு.க. ஸ்டாலின்  பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது  அவர் பேசியதாவது:  இத்தனை நாட்களாக ஜல்லிக்கட்டு நாயகன் என்று தனக்குத்தானே விளம்பரம் தநது கொண்டிருந்த  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று பிரதமர் மோடி முன்பு பேசும்போது, உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்கிறார். இது  உலகமகா நடிப்புடா சாமி. ஜல்லிக்கட்டுக்கு காரணமானவர்கள் இளைஞர்கள், எந்த அரசியவாதியும் கிடையாது. இளைஞர்கள் நடத்திய போராட்டத்தினால் தான் ஜல்லிக்கட்டு வந்தது. ஆகவே, அப்படிப்பட்ட இளைஞர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்த வேண்டாம்.

 போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும். அதற்காக  கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்து தடியடி நடத்தி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள். ஆகையால், கருத்துக்கணிப்பை கண்டு பெருமிதம் கொள்ளமாட்டேன். தொடர்ந்து பணியை சிறப்பாக செயலாற்றுவேன். ஒரு தொகுதியில் கூட அதிமுக பெற கூடாது.

தமிழகத்தில் 200 அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்: ஒரு அதிமுக வெற்றி பெற்றாலும், அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கமாட்டார்கள், பாஜக எம்பியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். மோடி எதனை முறை வந்தாலும், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு நடக்காது என்றார் மு.க.ஸ்டாலின்.

Top