28/Jan/2021 06:24:44
ஈரோடு, ஜன: ஈரோடு பழையபாளையம் இந்து நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் அதேபகுதியில் சீனிவாச என்ற பெயரில் சைசிங் மில் நடத்தி, பஞ்சுகளில் இருந்து நூல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் மில்லின் மேற்கூரை மற்றும் ஜன்னல் ஓரங்களில் தேங்கியிருந்த கழிவு பஞ்சுகளில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சைசிங் மில்லில் பிடித்த தீ, அருகே இருந்த பஞ்சு குடோனுக்கும், தயாரிக்கப்பட்ட நூல் பண்டல்களுக்கும் பரவாமல் 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.