logo
ஈரோட்டில் இரவில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

21/Apr/2021 07:14:46

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து இரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால்  வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனல் காற்றால் அவதி அடைந் தனர்.  வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் இரவு 11 40 மணி முதல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணி முதல் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் மீண்டும் துவங்கியது. பல்வேறு இடங்களில் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. 

இதேபோல் நேற்று இரவு கொடிவேரி, குண்டேரி பள்ளம் , வரட்டுப்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் நம்பியூர், சத்தியமங்கலம், பவானி, தாளவாடி, சென்னிமலை, பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Top