28/Mar/2021 08:47:53
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.
திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் விராலிமலை தொகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது திரளான பெண்கள் அவருக்கு வரவேற்பளித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
மக்கள நீதி மய்யத்தின் வேட்பாளர் சரவணன் நூதன முறையில் பத்திரத்தில் வாக்குறுதியை அச்சிட்டு வாக்காளர்களிடம் விநியோகித்து வாக்கு சேகரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.