13/Jun/2021 05:46:02
ஈரோடு, ஜூன் :ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் ஏழை மக்கள் 200பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி சூரம்பட்டியில் நடந்தது. நிகழ்ச்சி்க்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமை வகித்தார்.
கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கலந்து கொண்டு ஏழை-எளிய மக்கள் 200பேருக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், எம்ஆர்.அரவிந்த ராஜ், ஈரோடு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பி ஏ பெரியசாமி, நெசவாளர் அணி தலைவர் சி.மாரிமுத்து, சேவா தள தலைவர் பி.ஆறுமுகம்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்
கே.விஜய் கண்ணா மண்டல தலைவர்களான ஆர்.விஜயபாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக், ஈரோடு மாநகர் மாவட்ட பொது செயலாளர் டி.
கண்ணப்பன், ஏ குணசேகரன் சிறுபான்மை துறை
தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் பாஷா மாவட்ட செயலாளர்களான கே.ஜே.டிட்டோ, சிவா
என்கிற சிவக்குமார்.
இளைஞர் காங்கிரஸ் சதீஸ்,சூரம்பட்டி பிரகாஷ், டி.கருக்குவேல்,லோகநாதன்,மொடக்குறிச்சி முன்னாள் வட்டார தலைவர் வி கே செந்தில் ராஜா சூரம்பட்டி பகுதியை சேர்ந்த நிர்வாகிகளான திருவேங்கடம், கணேசன், சக்திவேலு, யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.