logo
 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைய வேண்டி காங்கிரஸார் சர்வமத கூட்டு பிரார்த்தனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைய வேண்டி காங்கிரஸார் சர்வமத கூட்டு பிரார்த்தனை

25/Apr/2021 09:58:56

ஈரோடு, ஏப்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள .வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைய வேண்டி ஈரோட்டில் காங்கிரஸார் சார்பில்  சர்வமத கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

 தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான .வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இன்று மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் .வி.கே.எஸ். இளங்கோவன்  கரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டி சர்வமத கூட்டு பிரார்த்தனை  மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது.

  இதில், துணைத் தலைவர் கே.என். பாட்ஷா முன்னிலை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாச்சலம், பொதுச் செயலாளர்கள் கனகராஜ், கண்ணப்பன், சச்சிதானந்தம், மண்டல தலைவர்கள் அம்புலி விஜயபாஸ்கர், திருச்செல்வம், ஜாபர் சாதிக்,

எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர் ராஜேந்திரன்,நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, சேவா தள தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, யூசுப் சித்திக், புனிதன், செந்தில், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Top