25/Apr/2021 09:58:56
ஈரோடு, ஏப்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைய வேண்டி ஈரோட்டில் காங்கிரஸார் சார்பில் சர்வமத கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இன்று மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டி சர்வமத கூட்டு பிரார்த்தனை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது.
எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர் ராஜேந்திரன்,நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, சேவா தள தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, யூசுப் சித்திக், புனிதன், செந்தில், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.