18/Dec/2020 12:16:20
ஈரோடு, டிச: பெட்ரோல், டீசஸ், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் தலைவா் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பெட்டேரால், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தி இதில், பங்கேற்ற அனைவரும், முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட தலைவர் பிரபுதேவா, மாநகர செயலாளர் ராபர்ட் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.