25/Nov/2020 10:04:06
புதுக்கோட்டை: விராலிமலை நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மேதிய விபத்தில் காரில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னையில் இருந்து காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை மோகன்(58) ஓட்டி வந்தார். புதன்கிழமை அதிகாலை விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த மணிகண்டன்(45), மதுரை பனையூரைச் சேர்ந்த பிரபு(53) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மதுரை அய்யனாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், பிரபு, மோகன் உள்ளிடோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற விராலிமலை போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்ராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்