logo
ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதிய விபத்தில், நடமாடும் காய்கறி வாகன ஓட்டுனர் படுகாயம்

ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதிய விபத்தில், நடமாடும் காய்கறி வாகன ஓட்டுனர் படுகாயம்

06/Jun/2021 09:10:17

ஆலங்குடி, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதிய விபத்தில், நடமாடும் காய்கறி வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ராமு (32). இவர், நடமாடும் வாகனத்தின் மூலம் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாகனத்திற்கு டீசல் நிரப்புவதற்காக சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது, புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி, நடமாடும் காய்கறி வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்தகாயமடைந்த காய்கறி வாகனத்தின்  ஓட்டுனர்  ராமு படுகாயமடைந்தார். இது குறித்து, தகவறிந்த ஆலங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர்  சந்திரகாந்த் சம்பவ இடத்திற்கு சென்று, ராமுவை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுனரைத் தேடி வருகின்றனர்.

Top