24/Jun/2021 12:50:56
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பெண் பயணிகள் 24 மணி நேரமும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம். மின்சார ரயிலில் ஆண் பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படும் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணியாமல் சிக்கினால் ரூ.500 பராதம் விதிக்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.