logo
ஆரம்ப சுகாதார மையங்களில்  கோரோனா இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி: பொதுமக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு

ஆரம்ப சுகாதார மையங்களில் கோரோனா இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி: பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

05/Jun/2021 10:46:55

ஈரோடு, ஜூன்: ஈரோடு ஆரம்ப சுகாதார மையங்களில்  நடத்தப்பட்ட கொரோனா இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி போடும் முகாம்களில்  பொதுமக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு.

இந்தியாவில் கொரோனா 2 - ஆம் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை பல்வேறு மாநிலங்க ளில் ஏற்படுத்தியது. கொரோனா பரவல்லை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன.  ஈரோடு மாவட்டத்திலும் இந்த இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட மக்கள் படையெ டுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. 

ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதைப் பற்றி அறியாத மக்கள் ஒரு மையத்தில் 500 பேர் வரை கூடி விடுகின்றனர்.100 பேருக்கு  தவிர மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவியதால் பல்வேறு மையங்களில் மக்கள் தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையங்களிலும் என்ன தடுப்பூசி போடப்படும் என்று விவரம் குறித்து  அறிவிப்பு  வைக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 - பரிசோதனை மையங்களிலும்  கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டுமே போடப்பட்டது.

 இதுகுறித்து அந்த இந்த மையங்களில் முன்பு அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது.  இது பற்றி விவரம் தெரியாத மக்கள் 500 -க்கும் மேற்பட்டோர் வழக்கம்போல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தில் குவிந்தனர்.  முதல்  டோஸ் தடுப்பு ஊசி போடப்படவில்லை என்றதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 ஈரோடு அகஸ்தியர் வீதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்  முதலே 500-க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் வாங்க வரிசையில் காத்து நின்றனர்.இன்று கோவேக்சின் 2-ம் டோஸ் மட்டுமே போடப்படும் என்று கூறியதால் ஆத்திர மடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இது குறித்து தகவலறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சமாதானப்படுத்தினார். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இரண்டாம் டோஸ் தடுப்பூசியை பொதுமக்கள் போட்டுச் சென்றனர்

Top