13/Mar/2021 04:54:01
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கினர்.
பொன்னமராவதியில் அதிமுக ஒன்றிய நகர அதிமுக சார்பில் தேர்தல் பணிக்கான செயல்வீரர் கூட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து தலைமையில் நடைபெற்ற தேர்தல் பணிக்கான செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள்.
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வீ.ஆர. கார்த்திக் தொண்டைமான் மாங்கோட்டை, மேலப்பட்டி, களபம் ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பாசறை செயலர் கருப்பையா, தொழிலதிபர் பழனிவேலு ஆகியோர் உடன் சென்றனர்.
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்திலுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் பிரசாரத்தை தொடங்கினார். இதில், மாவட்ட பொருப்பாளர் கே.கே, செல்லப்பாண்டியன், சொத்துப்பாதுகாப்புக்குழு உறுப்பினர் த. சந்திரசேகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சுப. சரவணன் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி அங்குள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
விராலிமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் விராலிமலை முருகன் கோயிலுக்குச்சென்று வழிபாடு நடத்திய பின் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதன் தனது தொகுதி தொடங்கும் எல்லையில் மண்டியிட்டு மண்ணையும் மக்களையும் வணங்கியபின் தனது பிரசாரத்தை தொடங்கினார்.