logo
முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள்: ஆதரவற்றோருக்கு உணவளித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர்

முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள்: ஆதரவற்றோருக்கு உணவளித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர்

04/Jun/2021 08:36:52

புதுக்கோட்டை, ஜூன்: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அரியாணிப்பட்டியிலுள்ள  ஆதரவற்றோர் இல்ல வாசிகளுக்கு  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் உணவு வழங்கினர்.

அரியாணிப்பட்டியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான இல்லத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் 70 பேருக்குதமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மதியஉணவு வழங்கப்பட்டது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் வழிகாட்டலின்படி,  மாவட்டத்தலைவர் திரு.எம்.ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் நாயகம், மாவட்டம் பொருளாளர் ஆர்.செந்தில்குமார், செய்தித்தொடர்பாளர் அ.ரகமத்துல்லா செய்திருந்தனர்.

Top