22/Jun/2021 08:02:41
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ,கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராம கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலி ஆண்டின் இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் அவர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து குளத்தூர் தாலுகா
அலுவலகத்துக்கு வருகை தந்த இலுப்பூர் வருவாய்
கோட்ட அலுவலர் தண்டாயுதபாணியை குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி மற்றும்
குளத்தூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள்
வரவேற்றனர்.
பின்னர், தணிக்கை செய்யப்பட்ட கிராம வருவாய் கணக்குகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் புங்கை, வாதாம், வேம்பு ,நொச்சி ஆகிய மரக்கன்றுகளை இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் தண்டாயுதபாணி நட்டு வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க. தமிழ்மணி, குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாதேஸ்வரன், முத்துவேல், கருத்த பாண்டியன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.