01/Jun/2021 04:11:56
புதுக்கோட்டை, ஜூன்: கொராணா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியில் கொரானா கட்டுப்பாட்டு உதவி மையம் செவ்வாய்கிழமை திறக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர்
எஸ்.ரகுபதி, புதுகை எம்எல்ஏ டாக்டர்
வை. முத்து ராஜா ஆகியோர் கலந்து கொண்டு தவ்ஹீத் ஜமாஅத்
அமைப்பின் சேவைகளை பாராட்டினர்.
இந்த கட்டுப்பாட்டு உதவி மையம் மூலம் கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனை அழைத்து செல்வது,
நோய்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தொற்று கண்டறியும் முகாம்
ஏற்பாடு செய்து கொடுத்தல், தடுப்பூசி முகாம்,
ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் வசதி, தனிமை படுத்தி கொண்டவர்களுக்கு உணவு வழங்குதல்.
நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல், நோய் எதிர்ப்பு சக்திக்கான கபசுர குடிநீர் வழங்குதல். கொரானா நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்தல், மருந்து உபகரணங்கள் கிடைக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்படும். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 50 மையங்கள் திறக்கப்படுவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.