logo
கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுள்ளவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் தனி 10 படுக்கை வசதிகள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுள்ளவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் தனி 10 படுக்கை வசதிகள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

28/May/2021 10:52:19

ஈரோடு, மே:  கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுள்ளவர்களுக்கு  பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் தனி 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதாக    தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துச்சாமி  தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆலம் பவுண்டேஷ்ன் சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்  அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு கட்டில், மெத்தை,சக்கர நாற்காளி,ஆக்ஸி பல்ஸ் மீட்டர் உள்ளிட்டவற்றை மருத்துமனை அலுவலர்களிடம் வழங்கினார், தொடந்து மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி  செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெருந்துறை மருத்துவ கல்லூரில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 350 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,மேலும் 300 படுக்கைகள் 10 நாட்களுக்குள் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக  ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யபட்டுள்ளது, இனி  ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம், பவானி அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் 100 முதல் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்ப்பட்டுள்ளது, அதுமட்டு மின்றி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆரம்பகட்ட கொரனா அறிகுறி உள்ளவர்களுக்கு பள்ளி கல்லுரிகளில் 3500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது,

ஆகவே பொதுமக்களுக்கு கொரனா அறிகுறி இருந்தால் தாமாக முன்வர வேண்டும் எனவும் சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Top