logo
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

01/Jan/2021 04:23:33

ஈரோடு, ஜன: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு மூலப் பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்கள் அயுப்அலி, திருச்செல்வம் ,ஜாபர்சாதிக், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் சின்னசாமி, மாநில எஸ்.சி. பிரிவு பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் கோதண்டபாணி, பாஸ்கர்ராஜ், அரவிந்தராஜ்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனகராஜ், வின்சென்ட், சாகுல் அமீது, சச்சிதானந்தம், சூரம்பட்டி பிரகாஷ், அங்காள பரமேஸ்வரி, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கே.என். பாட்ஷா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top