logo
பிப்.23-இல் தமிழகஅரசின்  இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் ) தாக்கல்

பிப்.23-இல் தமிழகஅரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் ) தாக்கல்

17/Feb/2021 10:46:21

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, இடைக்கால  நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்படுகிறது.

இது குறித்து பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் வரும் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

மேலும், பிப்ரவரி 23-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு 2021- 2022-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழக துணை முதல்வரும் நிதியமைச்ருமான ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால  நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

Top