logo
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகளுடன் புதியகட்டிடம் கட்டும் பணி:  அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகளுடன் புதியகட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் முத்துசாமி ஆய்வு

21/May/2021 06:56:57

ஈரோடு, மே ஈரோடு பெருந்துறை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணியினை வீட்டுவசதிதுறை அமைச்சர் சு. முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டதில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக இங்கு வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாகஈரோடு மாவட்டத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கூடுதல் படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகள் போர்கால அடிப்படையில் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்

Top