03/Mar/2021 10:03:52
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி களில் பாதுகாப்புப் பணிக்கு கூடுதல் போலீஸார் ஈடுப்படுத்தப்படுவார்கள் என்றார் எஸ்.பி தங்கத்துரை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓட்டுப்பதிவான வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூறியதாவது: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பிறகு உரிமம் பெற்று துப்பாக்கி படைக்கலன் வைத்திருப் போர் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 447 துப்பாக்கிகள் உள்ளன. இவை அனைத்தும் போலீஸாரால் பெறப்பட்டுள்ளன.
இதில் வங்கி பணம், நகை, பாதுகாப்புக்காக 58 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஓட்டு பதிவுக்காக 939 இடங்களில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு 939 போலீஸார் பணி அமர்த்தப்படுவார்கள் .பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,500 பேர் தேவைப்படுகிறார்கள் .
இதில் போலீஸ் அல்லாத ஆயிரத்து 500 பேர் அவசியமான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஓட்டுப்பதிவு நாளில் பாதுகாப்புக்கு கர்நாடக மாநில போலீஸார் வரவழைக்கப்படுவார்கள். பர்கூர், தாளவாடி, எல்லக்கட்டை, புளிஞ்சூரில் தேர்தலுக்காக மதுவிலக்கு சோதனைச் சாவடி அமைக்க ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளோம் .மாவட்டத்தில் 873 ரவுடிகள் உள்ளனர். இவர்களில் 90 பேர் சிறையில் உள்ளனர் . மீதமுள்ளவர்கள் நடவடிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.