logo
 தாளவாடி மலைப்பகுதியில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த    2500  மதுபாக்கெட்டுகளும்  தொடர்புடைய   5 பேர்   கைது

தாளவாடி மலைப்பகுதியில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 2500 மதுபாக்கெட்டுகளும் தொடர்புடைய 5 பேர் கைது

20/May/2021 05:33:56

ஈரோடு மே:  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  கர்நாடகா மாநிலத்தில் தயாரான   ரூ.3  லட்சம்   மதிப்புள்ள 2500  மது  பாக்கெட்டுகளையும் அதைக் கடத்தி வந்த கார் மற்றும் 5  பேரை போலீஸார்  கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம், தாளவாடி  ஆசனூர் காவல் நிலைய பகுதிகளில்  மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்உத்தரவுப்படி தாளவாடி  மற்றும் ஆசனூர் போலீசார், மாவோயிஸ்ட் சிறப்பு தனிப் பிரிவினர் ஆகியோர்  சந்தேகத்துக்கு இடமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  தாளவாடியில் உள்ள கலிமுல்லா என்பவரது வீட்டில் சோதனை செய்த போது சுமார் கர்நாடக மாநிலத்தில் தயாரான 1000  மது பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் இவரது நண்பர்கள் ஒசூர் சேகர், அருள்வாடி மாதேவா, தலமலை மஞ்சுநாதன், நெய்தாளபுரம் நாகேஷ் ஆகியோர் வீடுகளில் சோதனை செய்த போது மொத்தம் 2500 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடாகாவில் இருந்து கடத்தி, விற்பனைக்காக வைத்திருந்த  5 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Top