27/May/2021 12:33:43
ஈரோடு, மே : ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற கட்டணம் வசூலித்தாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தமிழக அரசு இலவச மருத்துவ சேவையை செயல்படுத்தி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை களில் நிர்ணயிக்கப்பட்ட கோவிட்-19 சிகிச்சைகளுக்கான தொகுப்பு வீதம், கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.38 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.33 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.28 ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஏ3 முதல் ஏ6 வரையுள்ள தர மருத்துவமனைகளான கேர்24 மெடிக்கல் சென்டர், ஈரோடு மெடிக்கல் சென்டர், கே.எம்.சி.எச், மாருதி மெடிக்கல் சென்டர், செந்தில் பலதுறை, சி.கே.மருத்துவமனை, ஈரோடு எமர்ஜென்சி கேர், ஆர்த்தோ லைப், பிவெல், அரவிந்த், ஈரோடு காவிரி பலதுறை ஆகிய தனியார் மருத்துவமனைகளில்
ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய
சிகிச்சைக்கு ரூ.16,500, தீவிர சிகிச்சை பிரிவு
வெண்டிலேட்டர் வசதியுடனான
சிகிச்சைக்கு ரூ.34,500, தீவிர சிகிச்சை பிரிவில்
ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.30ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில்
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக
குறைப்பதற்கு ரூ.25, 500 என கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு நந்தா மருத்துவ கல்லூரி
மருத்துவமனை, கோபியில் உள்ள அபி எஸ்.கே.மருத்துவமனை, சத்தியமங்கலம்
ரித்தீஷ் மருத்துவமனை, கே.ஜி.ஆர். சர்ஜிக்கல் நர்சிங்ஹோம் ஆகிய
இடங்களில் ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத
மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன்
உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.18 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவு
வெண்டிலேட்டர் வசதியுடனான
சிகிச்சைக்கு ரூ.38ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர்
வசதிக்கு ரூ.33ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன்
கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.28
ஆயிரமும்.
சத்தியமங்கலம் கே.பி.நர்சிங் ஹோம், பவானி ஸ்ரீ மணி மருத்துவமனை, பெருந்துறை கொங்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்குரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.16 ஆயிரத்து 500, தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.34 ஆயிரத்து 500, தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.25 ஆயிரத்து 500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்
மூலம் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்படும்போது
காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை காண்பிக்க
வேண்டும். காப்பீட்டு அட்டை தொலைந்து விட்டால்
பழைய அல்லது புதிய ரேஷன் கார்டு எண்ணை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில்
உள்ள காப்பீட்டு திட்ட அதிகாரி அல்லது
மாவட்ட காப்பீட்டு திட்ட அதிகாரி அல்லது
மாவட்ட கட்டுப்பாட்டு அறையான 1077-க்கு தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் ரெம்டெசிவர் போன்ற மருந்துகளுக்கும், டைமர், எல்.டி.எச் போன்ற பரிசோதனைகளுக்கும் கூடுதல் கட்டணம் பயனாளிகளின் சார்பில் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்.
இந்த காப்பீட்டு திட்டத்தில்
சிகிச்சை பெறும் பயனாளியிடம் இருந்து எந்தவொரு
கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது.
பொதுமக்களை பொறுத்தவரை மேற்கூறிய கட்டணம் பொது
படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியறை
மற்றும் பிற வசதிகள் கொண்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
மேலும், ஆக்சிஜன் இல்லாத சிகிச்சைக்கு மாநகராட்சிக்கு எல்லைக்குள் ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் கூடுதலாக ரூ.2ஆயிரத்து 500 காப்பீட்டு இல்லாத இதர பொதுமக்களிடம் கட்டணமாக பெறலாம்.
எனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்களோ அல்லது காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளிடம் கட்டணம் வசூலித்தாலோ 18004253993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.cmchistn.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.