19/May/2021 08:45:25
புதுக்கோட்டை , மே: தமிழக முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கல்லூரி, பள்ளி மாணவிகள் மூன்றுபேர் தங்களது சேமிப்புநிதி ரூ.11,000- தொகையை முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் வழங்கினர்.
மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மனின் புதல்வியும் சட்டக்கல்லூரி மாணவி
ஓவியா, பள்ளி மாணவி சுகிர்தா ஆகிய இருவரும் தங்களின் சிறு
சேமிப்பு நிதியிலிருந்து ரூ.10,000- தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை
வழங்கினர். இவர்களுடன் புதுக்கோட்டையைச் சேர்ந்த யோகநாதன் மகள் பள்ளி மாணவி லோகிதாஸ்ரீ தனது சேமிப்புத்தொகை ரூ.1000 வழங்கினார்.