15/May/2021 09:33:39
ஈரோடு, மே: ரேஷன் கடைகளில் ரூ .2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியா ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ- திருமகன் ஈவெரா தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ்
எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரப்பாலம் சீனியன் தோட்டத்தில்
உள்ள முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு ரேஷன்
கடையில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 2000 ரூபாய் உதவித்தொகையை தொடங்கி
வைத்தார்.
இதில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எச். எம் ஜாபர் சாதிக், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாஜலம், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே. என். பாட்ஷா, ஆகியோர் கலந்து கொண்டனர்.