logo
பாஜகவை  எந்தக் காலத்திலும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

பாஜகவை எந்தக் காலத்திலும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

18/Dec/2020 09:50:02

ஈரோடு- டிச: தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை எந்தக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்  காங்கிரஸ் கட்சியின் முன்ளாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன். 

ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையத்தில்  நடைபெற்ற செய்தியாளர்கள்  கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் ஏப்ரல் 1-ஆம் தேதி அன்றுஅரசியல் பிரவேசம் குறித்துஅறிவிப்பார். ஏன் என்றால் அன்றுதான் முட்டாள் தினம். எல்லோராலும் எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகிவிட முடியாது சிவாஜியே மக்களை கணக்கு போட தெரியாமல்  தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.எம்ஜிஆருக்கு நிகரான செல்வாக்கை கொண்டவர் சிவாஜி.

 அதிமுக- பாஜக கூட்டணி அதிமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும். 234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கும் ஆசை. ஆனால் அது சாத்தியமில்லை திமுகவுடன் காங்கிரஸ் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வேண்டிய தொகுதிகளை பெற்றுக் கொள்வோம். பாஜக வேல்யாத்திரை மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.தமிழகத்தில் பாஜக பலகோடிகளை செலவு செய்து வருகிறது.

 எத்தனை கோடி செலவு செய்தாலும் பாஜகவை  எந்தக்காலத்திலும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது.பெட்ரோல் விலை உலகசந்தையில் விலைகுறைந்தாலும்  இந்தியாவில் தான் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. பணக்காரர்களுக்காக வேளாண் சட்டங்களை மோடி கொண்டுவந்துளார். நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருப்பதாககக் கூறுவது தவறு. மாறாக மோடியின் தாடி தான் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன். 


Top