29/Apr/2021 10:54:33
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுத்திகரிப்பு செயயாமல் கழிவுநீர் வெளியேற்றிய தோல் தொழிற் சாலையின் மின் இணைப்பை துண்டிக்கவும் தொழிற்சாலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பெருந்துறைலெதர் இண்டஸ்ட்ரீஸ் ஈகோ செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற தோல் தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது சுதிகரிப்பு செய்யாமல் அருகிலுள்ள குளத்தில் வெளியேற்றப்படுவதாக சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்துறையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையை தமிழக மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுப்பப்ட்டது. இந்நிலையில் சுத்திகரிப்பு செயயாமல் கழிவுநீர் வெளியேற்றிய தோல் தொழிற்சாலைக்கு மின் இணைப்பை துண்டிக்கவும் தொழிற்சாலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்