07/Jun/2021 08:52:53
ஈரோடு, ஜூன்: பொதுமக்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என்றார் ஈரோடு மாவட்ட எஸ்பி-ஆக பொறுப்பேற்ற சசிமோகன்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கதுரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சட்டம் ஒழுங்கு துணை
ஆணையராக
பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக
சசிமோகன் நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே, இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட சசிமோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு எஸ்பி சசிமோகன் அளித்த பேட்டி: ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணியை முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுவோம். பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இது குறித்து புகார் தெரிவிக்க என்னுடைய வாட்ஸ்அப் எண்ணான 9488010684 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
புகாரில் உண்மை தன்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை
எடுக்கப்படும். பொதுமக்கள்
தயக்கமின்றி புகார்களை அளிக்கலாம். பொது மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் காவலர்கள் செயல்படுவார்கள் என்று அவர் கூறினார்.