logo
புதுக்கோட்டை அருகே பெருமாநாடு பகுதியில் இளைஞர்  கொலை:காவல்துறையினர் தீவிர விசாரணை.

புதுக்கோட்டை அருகே பெருமாநாடு பகுதியில் இளைஞர் கொலை:காவல்துறையினர் தீவிர விசாரணை.

26/Apr/2021 05:28:06

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை அருகே பெருமாநாடு பகுதியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் பொன்னையா (25) இவர் 2019-ஆம் ஆண்டு மணமேல்குடியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ள பொன்னையா ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இவர் மணமேல்குடி கொலை வழக்கு சம்பந்தமாக  புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  திங்கள்கிழமை  ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு அவரது சொந்த ஊரான  செவ்வூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்அவருக்கு பாதுகாப்பாக அவரது அண்ணன் விஜயகுமார் (28)உடன்  சென்றுள்ளார்.

இந்நிலையில் பெருமாநாடு அருகே இருவரும் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு பின்புறமாக இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 3 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர் இதில் அண்ணன் தம்பி இருவரும் வாகனத்தை விட்டு இறங்கி  அருகிலிருந்த வனப்பகுதிக்குள்  உயிருக்கு பயந்து  தப்பி ஓடியுள்ளன. ஆனால், இவர்களை துரத்திச்சென்ற  அடையாளம் தெரியாத மூன்று பேர் விஜயகுமாரை  வெட்டினர். இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 அவரது தம்பி பொன்னையா லேசான காயங்களுடன் தப்பிச்சென்றார்இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில்  திருக்கோகர்ணம்  போலீஸார்  சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை மேற்கொண்ட பொழுது இறந்தவரின் சட்டையில் செல்போன் இருந்ததை எடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து தப்பியோடிய பொன்னையா காவல்துறையினரிடம்  தஞ்சம் புகுந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு பொன்னையாவை  அழைத்துச்சென்று விசாரணை செய்த போது நடந்து முடிந்த கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி  நாங்கள் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து எங்களை வெட்ட வந்தனர்.

இதில் இருவரும் தப்பி செல்லும் பொழுது என் அண்ணனை வெட்டி விட்டு சென்றதாக அவரது தம்பி காவல்துறையிடம் கூறினார்இதனையடுத்து இறந்த விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Top