logo
கொரோனா விதிமீறல் : கோபியில் பிரபல நகை கடை பூட்டி சீல்வைப்பு

கொரோனா விதிமீறல் : கோபியில் பிரபல நகை கடை பூட்டி சீல்வைப்பு

29/Apr/2021 06:23:17

ஈரோடு, ஏப் : கொரோனா  கட்டுப்பாட்டு விதிகளை  மீறி கோபிச்செட்டி பாளையத்தில் திறக்கப்பட்டிருந்த பிரபல நகை கடை பூட்டி சீல்வைக்கப் பட்டது.

3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள கடைகளை மூடச்சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் விதிகளை மீறியும் கொரோனா தடுப்பு நடவடிக்கை ளை பின்பற்றாமலும்  கடைக்குள் வாடிகையாளர்களை வைத்து வியாபாரம் செய்த பிரபல தனியார் நகைக்கடைக்கு வருவாய்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுபாடுகளை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகை யில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள்  உள்ளிட்டவை கள் கடந்த 26-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் மூடவேண்டும் என அரசு உத்தரவிட்டது.

குறிப்பாக 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகளை பெரிய கடைகளை  மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.  அதன் அடிப்படையில் வியாழக்கிழமை  ஈரோடு மாவட்டத்தில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் என 3 ஆயிரம் சதுர அடிக்களுக்கும் மேல் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று அரசின் உத்தரவை மீறி கொரோனா நோய் தொற்று பரவும் விதமாக கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் செயல்படும் பிரபல தனியார் நகைக்கடையில்  வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்து குளிர்சாதனப்பெட்டியையும் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் தலைமை யிலான அதிகாரிகள் நகைக்கடையில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். கொரோனா விதிமுறைகளை மீறி கடைக்குள் முககவசம் கூட அணியாமல் 150 -க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் வாடிக்கையாளர்களை வெளியில் அனுப்பி கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Top