20/May/2021 06:38:56
ஈரோடு, மே: பவானி அருகே கொரோனா பாதிப்பால் கணவன் உயிரிழந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், 18-ஆம் தேதி சம்தாவதி ஆப்பக்கூடல் திரும்பினார். இங்கு, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது சம்தாவதியும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், மனமுடைந்த சம்தாவதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த ஆப்பக்கூடல் போலீஸார் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தியூர் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிய
நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
அந்தியூர் அருகே கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென மாயமாகி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி, கேத்தாநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (55). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அங்கிருந்து மாயமாகியுள்ளார்,
இதுகுறித்து உடனிருந்த நோயாளிகள் தெரிவித்தை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் அவரை நேற்று இரவு முதல் தேடி வந்தனர்.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்திற்கு எதிரே
உள்ள ஒரு தோட்டப் பகுதியில் உள்ள
மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து
அப்பகுதிக்கு சென்ற அந்தியூர் போலீசார் உடலை
மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது
குறித்து
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.