logo
 தமிழகம் முழுவதும்  ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், புதிய கட்டுப்பாடுகள்  பொது ஊரடங்கு   ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், புதிய கட்டுப்பாடுகள் பொது ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

25/Apr/2021 12:11:01

சென்னை, ஏப் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும்  ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், புதிய கட்டுப்பாடுகள்  பொது ஊரடங்கு  ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய  பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்,

அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும்  கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ்நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், . மேலும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில்  கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர  மற்ற பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், புதிய கட்டுப்பாடுகள்  பொது ஊரடங்கு  ஏப்ரல் 30 வரை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்திஸ்கர் மற்றும்  டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், கோவிட்  நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று  தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும்   சமீப காலத்தில் கொரோனா நோய்த்தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

 

குறிப்பாக 28.3.2021 அன்று, 13,070 நபர்கள் கொரோனா நோய்த்  தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 23.4.2021 அன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  95,048 ஆக உயர்ந்துள்ளதுநோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் 26.4.2021 அதிகாலை 4 மணி முதல் 30.4.2021 -ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

 

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் , அனைத்து மதுக்கூடங்கள்   பெரிய அரங்குகள்), கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும்  இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள்  இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.

 

தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள்இயங்க அனுமதி இல்லைஅனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை  மட்டும் அனுமதிக்கப்படும்உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து  உண்பதற்கு அனுமதி இல்லைஅனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

 அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள்  வழிபாட்டிற்கு  அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.

 

 கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.

 திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில்  50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.   இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

 

 

கோல்ப்டென்னிஸ் கிளப்உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் ) செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும்  தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும்  அனுமதி அளிக்கப்படும்.

 

புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org  என்ற வலைதளத்தில் பதிவு செய்த  (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்வெளிநாட்டிலிருந்து  தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும்  http://eregister.tnega.org    என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

  

பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும்  முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுபொது மக்கள்  வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி, கை  கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே  இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

  மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும்பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.   

 

Top