logo
நான்காவது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம்

நான்காவது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம்

25/Feb/2021 10:18:12

புதுக்கோட்டை, பிப்: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்காவது நாளாக வியாழக்கிழமையன்று தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகள்: 38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது குடும்பத்தை பாதுகாக்கும் பொருட்டு ரூ.10 லட்சம் பணப்பயன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சந்திரா தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.பச்சையம்மாள் மற்றும் நிர்வாகிகள் த.பத்மா, தனலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.


Top