logo
ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் போக்சோவில் கைது

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் போக்சோவில் கைது

22/Nov/2020 06:08:13

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் ஆறுமுகம்(26). கட்டிட தொழிலாளி. ஆறுமுகத்திற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை, கடந்த 19-ஆம் தேதி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம்.

பின்னர், சிறுமி அவரது தந்தையிடம் நடந்ததை கூற, அதிர்ச்சி அடைந்து அவர் ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். 


Top