logo
மன்மோகன் சிங் , ராகுல் காந்தி குணமடைய ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சர்வமத பிரார்த்தனை

மன்மோகன் சிங் , ராகுல் காந்தி குணமடைய ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சர்வமத பிரார்த்தனை

22/Apr/2021 07:17:56

ஈரோடு, ஏப்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் நலம் பெற வேண்டி ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இன்று மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் தொற்றில்  இருந்து குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது.

 மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் துணைத் தலைவரும் பாட்சா முன்னிலை நடந்த நிகழ்வில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, கோதண்டபாணி, பொதுச் செயலாளர்கள் கனகராஜ், கண்ணப்பன், வின்சென்ட், மண்டல தலைவர்கள் அயுப் அலி, விஜயபாஸ்கர், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர்  ராஜேந்திரன், நிர்வாகிகள் சிராஜுதீன், முகமது யூசப், சித்திக், ஜவஹர் அலி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top