09/Jan/2021 07:40:19
புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் ஜன.16-ல் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில்
காளைகளை அவிழ்த்து விட உரிமையாளர்கள் ஏராளமானோர் சனிக்கிழமை முன்பதிவு செய்ய குவிந்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஜன.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்காக, அங்குள்ள சித்திவிநாயகர் கோயில் திடலில் வாடிவாசல் அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு சனி்க்கிழமை நடைபெற்றது. இதில், புதுகை,
ராமநாதபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளின்
உரிமையாளர்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்ய குவிந்தனர்.