logo
சாலையில் யானைகளின் நடமாட்டம்.. அச்சத்தில்  பொதுமக்கள்..

சாலையில் யானைகளின் நடமாட்டம்.. அச்சத்தில் பொதுமக்கள்..

11/Apr/2021 08:33:52

ஈரோடு, ஏப்: பவானிசாகர் அணை பூங்கா அருகே பகல் நேரத்தில் சாலையைக் கடந்து செல்லும் யானைகளால்  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால்  தாகம் தணிப்பதற்காகவும் உணவுக்காகவும் வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியேறி சாலையோரம்  கிடைக்கும் தீவனங்கள் உட்கொள்வதும் சாலையை கடப்பதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

 இந்நிலையில்,  பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள்  பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள பாலத்தை கடந்து சென்றது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். 

தற்போது கோடைகாலம் என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி சாலையோரம் நடமாடும் எனவும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக் கையோடு பயணிக்க வேண்டும் எனவும் பவானிசாகர் வனத்துறையினர்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Top