27/Apr/2020 05:39:38
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டுறவு வங்கியின் பெண் ஊழியரை வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டியதாக 19 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை கூட்டுறவு வங்கியில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் எஸ்.மகேஸ்வரி. இவர், ஆலங்குடி அருகேயுள்ள வடக்கு கொத்தகோட்டை பகுதியில், ஒரு வீட்டில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வாடகை கேட்டு யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி மகேஸ்வரியை வீட்டின் உரிமையாளர்கள், மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில், ஆலங்குடி போலீஸார் வடக்கு கொத்தகோட்டையைச் சேர்ந்த பி.புகழேந்தி, புண்ணியமூர்த்தி, எ.மாரிமுத்து உள்ளிட்ட 19 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்