logo
கொரோனா பரவலைத்தடுக்க அந்தியூர் பேரூராட்சியில்  கிருமிநாசினி தெளிககும் பணி தீவீரம்

கொரோனா பரவலைத்தடுக்க அந்தியூர் பேரூராட்சியில் கிருமிநாசினி தெளிககும் பணி தீவீரம்

10/Apr/2021 07:15:35

ஈரோடு ஏப்:  ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


நாடு முழுவதும்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பேரூராட்சி பகுதிகளில் தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேசுராஜ் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் அந்தியூர் பஸ் நிலையம், ரவுண்டானா,  பர்கூர் சாலை,  சத்தி ரோடு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பணி பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் இந்தப்பணி தொடர்ந்து நடைபெறும் என  பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Top